×

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

 

சென்னை: வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC- Chennai A) வழக்கு பணியாளர் (Case worker) பணியிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC- Chennai A), பெண்கள் உதவி மையம் (181) போன்ற சேவை மையங்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயன்பெறுவதாகும்.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC- Chennai A) தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடமான வழக்கு பணியாளர் (Case worker) பணியிடங்கள் மூன்று காலியாக உள்ளது.

வழக்கு பணியாளர் (Case worker) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, சமூகப் பணியில் இளங்கலை பட்டம்(Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூபாய் Rs.18,000/-ஆகும். வழக்கு பணியாளர் (Case worker) பணியிடத்திற்கான விண்ணப்பத்தினை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உரிய சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 12.01.2026 அன்று 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், 8-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரியான oscnorthchennai@gmail.com மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Tags : Unified Service Center ,Chennai ,North Chennai Integrated Service Centre ,OSC- Chennai A ,Chennai District ,Governor ,Rashmi Siddharth Jagade ,
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000...