×

நாகை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம், ஜன. 1: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
எஸ்.பி செல்வகுமார் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

Tags : Nagapattinam SP ,Nagapattinam ,SP ,Selvakumar ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்