×

கல்லூரி மாணவி மாயம்

கடலூர், டிச. 25:கடலூர் அருகே கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகள் சுப்புலட்சுமி(21). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றவர் அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags : Mayam ,Cuddalore ,Ramesh ,Subbulakshmi ,Gondur ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்