டெல்லி : திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மக்கள் ஆளும் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மீது விரக்தியில் உள்ளனர் என்றும் பாஜக கூட்டணிதான் நல்லாட்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்று கேரள மக்கள் கருதுகின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
