மதுரை: பொதுநல வழக்கு தொடர்பவர்கள் காரணமின்றி மனுவை திரும்ப பெற அனுமதி கோரினால் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. கரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளதாக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
