×

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.860 கோடி ஒதுக்கீடு..!!

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்ககூடிய அரசாணை வெளியிட்டது. 2024 மே முதல் ஜூலை வரை ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன், வைப்பு நிதி, பணிக்கொடை விருப்பு சம்பளம், ஓய்வுதிய ஒப்படைப்பு தொகையானது தொடர்ந்து கடந்த சில நாட்களாக வழங்கப்படாமல் இருந்தது.

இவற்றை வழங்கவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆறு மாதங்களுக்கு வரையும் அவர்களுக்கு வழங்கவதற்கான தொகையானது ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2024க்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஓய்வுபெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பணிக்காலத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.860 கோடி நிதியானது தற்காலிகமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியானது உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டு விரைவில் ஓய்வு தியாகிகளுக்கு முன்பணமானது விரைவில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu Government Transport Clubs ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...