×

இரட்டை இலை சின்னம் இரண்டாச்சு… அமித்ஷாவிடம் ஒரு இலை எடப்பாடியிடம் ஒரு இலை: கருணாஸ் பேட்டி

 

ராமநாதபுரம்: எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலைச் சின்னம் தற்போது அமித்ஷாவிடம் ஒரு இலையாகவும், எடப்பாடியிடம் ஒரு இலையாகவும் உள்ளது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான நடிகர் கருணாஸ் நேற்று ராமநாதபுரத்தில் நிருபரிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. சிவகங்கை தொகுதிக்கு என்னை வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த உடனே, தொகுதி முழுவதும் பாஸிட்டிவான அலை ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகால திட்டங்கள், சாதனைகள், தற்போதைய தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் விரும்புகின்றனர்.

கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தேர்தல் வேலையை பம்பரமாக சுழன்று பார்த்து வருகின்றனர். எடப்பாடியை முதல்வராக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதுவே எனக்கு வெற்றியை தந்து விடும். பாஜக-அதிமுக கூட்டணி தமிழகம், தமிழர் நலனுக்கு எதிரானது. அதிமுகவை சிதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலையில், ஒரு இலை அமித்ஷாவிடம், ஒரு இலை எடப்பாடியிடம் உள்ளது. மதவாதக் கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Amitshah ,Tadapadi ,Karunas ,Ramanathapuram ,MGR ,Jayalalitha ,Amitsha ,Edapadi ,Mukulathor Tiger ,Mukulathor Tiger Force ,
× RELATED வரும் சட்டமன்றத் தேர்தலில்...