×

வேலூரில் வேறு பெண்ணுடன் தொடர்பு துன்புறுத்தும் கணவன் மீது நடவடிக்கை எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

வேலூர், ஜன.5: கணவர் அடித்து துன்புறுத்தவதாக குழந்தைகளுடன் இளம்பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சங்கீதா தனது குழந்தைகளுடன் வந்து எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சத்தியமூர்த்திக்கும், எனக்கும் திருமணம் ஆகிய 6 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 6 வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். எனது கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு உள்ளார். எனக்கு சீர்வரிசையாக கொடுத்த 6 சவரன் தங்க நகைகள், ஒரு ஜோடி தங்க வளையல் என்னிடம் பறித்து கொண்டார். என்னை அடித்து துன்புறுத்துகிறார். மேலும் எனது கணவர் அடகு கடை வைத்துள்ளார். எனது கணவர் தம்பி எனக்கு இரவு நேரத்தில் போன் பண்ணி மிரட்டல் விடுக்கிறார். எனக்கும், எனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags : teen ,office ,SP ,affair ,Vellore ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது