×

குரூப்-1 தேர்வு:2064 பேர் எழுதினர்

திருப்பூர், ஜன.4:  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்1-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில்  திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு, ஆகிய 2 வட்டங்களில் 16 தேர்வு மையங்களில் 4,501 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 16 தேர்வு மைய மேற்பார்வையாளர்களும், 2 பறக்கும் படையினரும், 2 மொபைல் பிரிவினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் வகையில் 16 வீடியோ கிராபர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம் சாலை, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் 2 வட்டங்களில் 16 தேர்வு மையங்களில் 4,501 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2064 நபர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். மீதமுள்ளவர்கள் எழுதவில்லை. இதன் விழுக்காடு 46 சதவீதம் ஆகும். மேலும் அனைத்து தேர்வர்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பு, முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வை எழுதினார்கள்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்