நாகை, ஜன.1: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதாபராமபுரம் ஊராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு நேற்று சாலை ஓரங்களில் நடப்பட்டது. மேலும் ஊராட்சி சார்பாக கூண்டுகள் அமைக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பணியாளர்களை கொண்டு பராமரிக்கப் பட உள்ளது.