திண்டுக்கல், ஜன. 1: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை: திண்டுக்கல் மண்டலத்தில் பணியாற்றி ஒய்வுபெற்ற பணியாளர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், ஓய்வூதியதாரர்களின் வாரிசுதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழ், தொடர்புடைய ஆவணங்களை, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்போர் திண்டுக்கல்-1 பணிமனை அலுவலகத்தில் நாளை ஜன.2ம் தேதி முதல் ஜன.30ம் தேதி வரையிலும், தேனி மாவட்டத்தில் வசிப்போர் நாளை ஜன.2ம் தேதி முதல் ஜன.10ம் தேதி வரை தேனி பணிமனை அலுவலகத்திலும், அதன்பின் ஜன.30ம் தேதி வரை திண்டுக்கல்-1 பணிமனை அலுவலகத்திலும் சமர்ப்பித்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஓய்வுபெற்ற பணியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வாழ்வு சான்றிதழ், தொடர்புடைய ஆவணங்கள் குறித்த விவரங்கள் அனைத்து கிளைகளிலும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் முககவசம் அணிந்தும், சான்றிதழ் சமர்ப்பிக்கும் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உள்ளூரில் வசிக்கும் நபர்கள் மதியத்திற்கு மேல் கைகெயாப்பமிட வருகை தர வேண்டும். மேலும் குறிப்பிட்ட தினத்திற்குள் வந்து ஆவணங்களை சமர்ப்பித்தும் தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.