×

பைக் விபத்தில் ஓய்வு ராணுவ வீரர் பலி

செய்யாறு, டிச.31: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(65). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த வேலையாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பினார். வந்தவாசி- காஞ்சிபுரம் சாலை கூழமந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையை கடந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : soldier ,bike accident ,
× RELATED ராணுவ வீரர் மாயம்