- இந்திய அரசு
- அதானி
- வாஷிங்டன் போஸ்ட்
- தில்லி
- எல். I. சி.
- பாஜக அரசு
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- ஐக்கிய மாநிலங்கள்
டெல்லி: எல்.ஐ.சி.யின் ரூ.35,000 கோடி நிதியை அதானி நிறுவனத்துக்கு ஒன்றிய பாஜக அரசு தாரை வார்த்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் முறைகேடு செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில் அதானியை பாதுகாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. துறைமுக நிறுவனம் கடனில் சிக்கியபோது, ரூ.35,000 கோடி எல்.ஐ.சி. நிதி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. விதிகளை மீறி அதானி நிறுவனத்தின் பங்குதாரராக எல்.ஐ.சி. சேர்க்கப்பட்டுள்ளது. அதானிக்கும், அவரது நிறுவனத்துக்கும் நெருக்கடி வரும்போதெல்லாம் இந்திய அரசு உதவுகிறது என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
