×

டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் தற்கொலை

கோபி, அக்.25: கோபி அருகே உள்ள பங்களாபுதூர் அரக்கன்கோட்டையை சேர்ந்தவர் காளியண்ணன் மகன் பாலசுப்பிரமணியம்(45). இவர் டி.ஜி.புதூர் நால்ரோட்டில் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஏளூர் மாதேஸ்வரன் கோயில் அருகே சென்ற பாலசுப்ரமணியம் அங்கு காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gopi ,Balasubramaniam ,Kaliyannan ,Banglaputhur Arakkankottai ,D.G. Puthur ,Matheswaran temple ,Yelur ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது