×

(தி.மலை) மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி

செய்யாறு, டிச.28: காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன்(39). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டிஜிட்டல் போர்டு தயாரிக்கும் கடையில் எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பாண்டீஸ்வரி என்ற மகளும், சிவனேஷ்பாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முருகன், செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடு சிப்காட் எதிரே உள்ள பேக்கரி ஒன்றில் டிஜிட்டல் போர்டை அமைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : T.Malai) Electrician ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...