×

பெட்ரோல் பங்கில் ஸ்ைவப்பிங் மெஷின் திருடிய வாலிபருக்கு தர்ம அடி

வேலூர், டிச. 27: குடியாத்தத்தில் பெட்ரோல் பங்கில் ஸ்வைப்பிங் மெஷின் திருடிய வாலிபருக்கு தர்மஅடி விழுந்தது. குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மதியம் அலுவலக அறைக்குள் சென்று உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பெட்ரோல் பம்ப் அருகில் வைத்திருந்த ஸ்வைப்பிங் மெஷினை திருடிக்கொண்டு தப்பியோடினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னார் அந்த வாலிபரை, குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், குடியாத்தம் அடுத்த ஏரிப்பட்டறை கிராமத்தை சேர்ந்த முனிசாமி(35) என்பதும், குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதும் தெரிய வந்தது. இதையடுத்து ேபாலீசார், அவரிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷினை கைப்பற்றி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முனிசாமியை கைது செய்தனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை