×

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!!

 

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர், மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், அசோக் நகர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், எழும்பூர், புரசைவாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey ,Chennai ,Chennai Meteorological Centre ,South Indian ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...