×

நீலகிரியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஊட்டி,டிச.25:நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7,836 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,850 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,665 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியான நிலையில் இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 44 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 141 பேர் அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!