கரூர்: கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது என துணை முதலமைச்சர் உதயநிதி கூறினார். இனிமேல் இதுபோன்று விபத்துகள் நடக்கக் கூடாது, அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உறுதியளித்தார்.
