×

டெம்பிள் ஜேசி சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா

திருச்செங்கோடு, டிச. 24: திருச்செங்கோட்டில் டெம்பிள் ஜேசி சங்கம் சார்பில், 2020ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஜேசி உறுப்பினர்களுக்கு, தலைவர் உமா ரமேஷ் விருதுகள் வழங்கி கௌரவித்தார். சிறந்த ஆட்சிக்குழு உறுப்பினர்களாக செயலாளர் பிரசன்னா பாலாஜி மற்றும் புனிதா சதாசிவம், கோபிநாத், சசிரேகா சக்திவேல், ரேவதி ஜெகதீசன், சத்யன், தீபா சியாம், சினேகா பிரசன்னா, ஆர்த்தி ஜனார்த்தனன்,தனுஸ்குமார் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் சுரபி ரமேஷ்,சிவகிரி,ரேவதி செந்தில்குமார்,உமாசங்கர்,தீபா,கௌசிகா சிவகிரி ஆகியோருக்கு சிறந்த பணிக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த வழிகாட்டியாக இருந்த மண்டல தலைவர் மதிவாணன்,மண்டல உதவி தலைவர் ரோகித் குமார் லோடா,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி மேகா,மாணவர் கவிஸ்குமார் ஆகியோருக்கு நாளைய நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிஆர்டி நிறுவன மேலாண் இயக்குனர் பரந்தாமன், கௌரவ விருந்தினராக முன்னாள் தேசிய தலைவர் பாலவேலாயுதம், மண்டல தலைவர் மதிவாணன் மண்டல தலைவர் தேர்வு ரோகித்குமார்,மண்டல உதவித்தலைவர் சபரி,முன்னாள் தலைவர்கள் மற்றும் ஜேசி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Award Ceremony ,Temple Jesse Association ,
× RELATED பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான்...