×

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

டெல்லி: ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் நேற்று இந்​திய, யுஏஇ உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் ஒன்றிய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச், கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்தார். இந்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். அமெரிக்கா எங்களது நம்பகமான கூட்டாளி. இவ்​வாறு அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார்.

இந்​தி​யா, அமெரிக்கா இடையே இது​வரை 5 சுற்று பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று உள்​ளன. ஆகஸ்ட் 25ம் தேதி 6-ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக இருந்​தது. ஆனால் இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​த​தால் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது. இந்த சூழலில் அமெரிக்க வர்த்தக குழு​வினர் சில நாட்​களுக்கு டெல்லி வந்​தனர். அப்​போது கருத்து வேறு​பாடு​கள் களை​யப்​பட்டு பேச்​சு​வார்த்​தையை முன்​னெடுத்​துச் செல்ல முடிவு செய்​யப்​பட்​டது. இரு நாடு​கள் இடையே விரை​வில் 6ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற உள்​ளது. இதில் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Tags : India ,US ,Union Minister ,Piyush Goyal ,Delhi ,UAE ,United Arab Emirates ,Abu Dhabi ,Union Trade Minister ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...