சேலம், செப்.13: சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர் ஜெயராமன் (51). இவர் வாழப்பாடியில் நடந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
