×

₹10க்கு பிரியாணி தருவதாக கூறிய கடை உரிமையாளர் கைது

விழுப்புரம், டிச. 15:  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடல் மைதானம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை ஓரமாக அரவிந்த் என்பவர் புதியதாக நேற்று பிரியாணி கடையை திறந்தார். புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையை பிரபலமாக்கவும், கடை குறித்து அனைவருக்கும் தெரியபடுத்தும் விதமாகவும்  10 ரூபாய் நாணயம் கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு விழுப்புரம் நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார். இந்த அறிவிப்பு அப்பகுதியினரிடையே பரவியதை தொடர்ந்து ஏராளான பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களுடன் பிரியாணி வாங்க கடையின் முன் குவிந்தனர்.
இதனால் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் கடையை மூடி கடை உரிமையாளர் அரவிந்தை கைது செய்தனர். அப்போது கடையின் முன் பிரியாணி வாங்க குவிந்திருந்தவர்கள் போலீசார் வருவதை கண்டதும் தெறித்து ஓடினர். அதனை தொடர்ந்து காவல் நிலையத்தித்கு தகவல் தெரிவிக்காமல் கொரோனோ ஊரடங்கு அமலில் உள்ளபோது அதிகமான மக்கள் கூட்டத்தினை கூட்டிய காரணத்திற்காக அரவிந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Tags : Shop owner ,
× RELATED மகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில்...