×

இளைஞர்களின் நலன் கருதி ஜல்லிபட்டியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

கரூர், டிச. 15: விளையாட்டு வீரர்கள் நலன் கருதி ஜல்லிபட்டியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியில் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.  மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடும் அளவுக்கு திறமை வாய்ந்த இளைஞர்கள் இந்த பகுதியில் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் முறையாக பயிற்சி மேற்கொள்ள மைதான வசதி ஜல்லிப்பட்டி பகுதியில் இல்லை. எனவே, இளைஞர்களின் விளையாட்டு நலன் கருதி மைதான வசதி கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : playground ,Jallipatti ,
× RELATED விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி