×

அதிமுக., ஆட்சியில் கஷ்டங்களை அனுபவிக்கும் மக்கள்

திருப்பூர், டிச.15:  தி.மு.க.சுற்றுச்சூழல்் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி திருப்பூர் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக, திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார்-அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டு காலம் அதிமுக.,ஆட்சியில், தமிழக மக்கள் அனுபவித்த இன்னல்களையும், அதை போக்குவதற்கு தி.மு.க. என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிந்து, அதை அறிக்கையாக சமர்பிக்க, என்னை போன்ற 15 நபர்களை, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்துள்ளார்.
நாங்கள் அந்தந்த பகுதி நிர்வாகிகளுடன் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களை எல்லாம் தெரிந்து வருகிறோம். இந்த கஷ்டங்களுக்கு 2021-ம் வருடம் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக அரியணையில் அமரும்போது தீர்வு ஏற்படும். மக்களின் குறைகளை கேட்க செல்லும்போது, எங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார். அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags : AIADMK. ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...