×

ஈரோட்டில் செப்.7 வரை நடக்கிறது ராணுவத்துக்கு அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் துவக்கம்: 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு

ஈரோடு: ஈரோட்டில் வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கும் முகாமில் 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களிலிருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்ஸ்டோரி கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மேலும், மத்திய வகைகள் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிபாய் பார்மா, ஹவில்தார் (கல்வி), ஹவில்தார் (சர்வேயர் தானியங்கி வரைபடவியலாளர்), மத ஆசிரியர் ஜூனியர் கமிஷன் அதிகாரி, ஜூனியர் கமிஷன் அதிகாரி (கேட்டரிங்) தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இம்முகாமை மாவட்ட கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாமில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மத்திய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ராணுவ சேர்க்கைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாம் செப்.7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உங்களுடைய வளர்ச்சிக்கும், வாழ்வில் மென்மேலும் முன்னோக்கி செல்லவும் இந்திய ராணுவம் ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் சேர்வதற்காக உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், துணை இயக்குனர் (பொது) (சென்னை மண்டலம்) அஸ்வதி, ஆட்சேர்ப்பு இயக்குனர்கள் அன்சுல் வர்மா, சுனில் யாதவ், ராஜட் ஸ்வர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Army Agniveer ,Erode ,Indian Army ,Agniveer ,VOC Park ,Tamil Nadu ,Coimbatore ,Tiruppur ,Salem ,Krishnagiri ,Dharmapuri ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...