×

ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, டிச. 9: தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 32 சமையலர் பணியிடங்களை ரூ.15,700 என்ற ஊதியத்தில் பூர்த்தி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் தஞ்சை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்