கரூர், டிச. 8: கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருப்படி விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான விழா நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோயில் மலையை வலம் வந்து, ஜெகநாத ஓதுவார் தலைமையில் திருப்புகழ் மற்றும் தேவாரம் பாடி திருப்படி பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.