×

விமான நிலைய மெட்ரோவில் புதிய நுழைவாயில் மற்றும் கிண்டி மெட்ரோவில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு!

சென்னை: விமான நிலைய மெட்ரோவில் புதிய நுழைவாயில் மற்றும் கிண்டி மெட்ரோவில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜி.எஸ்.டி சாலையில் இருந்து விமான நிலையம் மெட்ரோ வரை பாதசாரிகள் செல்ல புதிய நுழைவாயிலை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் திறந்துள்ளது.

இந்த நுழைவாயில் மெட்ரோ பயணிகள் விமான நிலைய வளாகம் வழியாக பயணம் செய்யாமல் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து நேரடியாக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழையவும், வெளியேறவும் மற்றும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும். பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் ஏற்கனவே புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி, எழும்பூர், புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர்ப் பேருந்து மெட்ரோ, வண்ணாரப்பேட்டை, விமான நிலையம் மெட்ரோ மற்றும் விம்கோ நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தாய்மார்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

The post விமான நிலைய மெட்ரோவில் புதிய நுழைவாயில் மற்றும் கிண்டி மெட்ரோவில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு! appeared first on Dinakaran.

Tags : airport metro ,Kindy Metro ,Chennai ,Pachchilam ,Kindi Metro ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...