இதற்காக இம்மண்டபத்தில் பக்தர்கள் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன், காயத்திரி தேவி உள்பட பல்வேறு அம்மன் சிலைகள், தசாவதார சுவாமி சிலைகள், அஷ்டலட்சுமி, பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், வெங்கடாசலபதி, திருமண கோஷ்டி பொம்மைகள், நாதஸ்வரம் கலைஞர் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள், சுவாமி சிலைகளை 9 படிக்கட்டுகள் அமைத்து அடுக்கி வைக்கும் பணியில் கொலு வழிபாட்டு பக்தர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காந்திமதி அம்பாள், நெல்லையப்பர் மர சப்பரத்தில் நடுநாயகமாக வீற்றிருந்து கொலுவுக்கு அழகு சேர்க்கும் வகையில் பக்தர்கள் காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான பொம்மைகள் கொண்டு வரப்பட்டு அடுக்கி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் சோமவார மண்டபத்தில் கொலு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
The post நவராத்திரி திருவிழாவுக்கு தயாராகும் நெல்லையப்பர் கோயில் ‘கொலு’வில் அணிவகுக்கும் சுவாமி பொம்மைகள் appeared first on Dinakaran.