அப்போது அவ்வழியாக வந்த தனியார் சுற்றுலா பஸ், அந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் தென்காசியை சேர்ந்த கணேசன் (36) என்பதும், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கோழிப்பண்ணையில் வேலை செய்வதும், படுகாயமடைந்தவர் நாகர்கோவில் இருளப்பபுரம் ராஜ்குமார் (44) என்றும் தெரிய வந்துள்ளது.
The post நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் மோதி பஸ்சில் சிக்கி வாலிபர் பலி: மேலும் ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.