1 ½ கப் பச்சை பட்டாணி,
பனீர் (துருவியது) – 100 கிராம்,
வறுத்த கடலை மாவு – 3 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்புகள் – 8,
பச்சை மிளகாய் – 4,
கொத்தமல்லி இலைகள் – ¼ கப்,
இஞ்சி (நறுக்கியது) – ½ அங்குலம்,
புதினா இலைகள் – சிறிதளவு,
கரம் மசாலா தூள் – ½ தேக்கரண்டி,
சீரகம் (வறுத்தது) – 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்,
எள் விதைகள் – 1 ½ டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
நெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்து சில நொடிகள் கிளறவும். பட்டாணி மென்மையாகும் வரை மூடி 5-7 நிமிடங்கள் சமைக்கவும். ஆறியதும், பிளெண்டரில், முந்திரி, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் புதினா சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும். இதில் வறுத்த கடலை மாவு, கரம் மசாலா தூள், சோள மாவு, எள், பனீர், சீரகம் மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும். கைகளில் எண்ணையினை லேசாக தடவி கபாப்களாக வடிவமைத்து எண்ணையில் பொரிக்கவும். அல்லது தவாவிலும் இரண்டு பக்கம் திருப்பி போட்டு வறுக்கலாம். சட்னியுடன் பரிமாறவும்.
The post மட்டர் கபாப் appeared first on Dinakaran.