இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராததால், வெறும் 5 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதில், 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, 9.50 சராசரியில் ரன்கள் கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் விளையாடாத நிலையில், வரும் ஆஷில் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரின் காயத்தின் தன்மையை கண்காணிக்க, மும்பை அணியில் இருந்து விலகி ஆர்ச்சர் நாடு திரும்புகிறார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் உடற்தகுதியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அவர் நாடு திரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக, கிறிஸ் ஜோர்டன் மும்பை அணியில் சேர்க்கப்ட்டுள்ளார் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2 கோடிக்கு கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன் அணி வாங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ஜோர்டான் (வயது 34), இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜோர்டன் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 4 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார். இங்கிலாந்து அணிக்காக 87 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
The post காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்: கிறிஸ் ஜோர்டன் அணியில் சேர்ப்பு appeared first on Dinakaran.