×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 690 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: புதன்கிழமை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% வரை உயர்ந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 690 புள்ளிகள் உயர்ந்து 70,060 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. டாடா ஸ்டீல் 3.8%, பவர் கிரிட், எச்.சி.எல். டெக் பங்குகள் தலா 3.4%, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மகிந்திரா பங்குகள் 3% விலை. இந்துஸ்தான் யுனிலீவர் பங்கு 2.9%, JSW ஸ்டீல், பார்த்தி ஏர்டெல் பங்குகள் தலா 2.7% விலை உயர்ந்து விற்பனையாயின. பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., எம் எம் பங்குகள் தலா 2%, எச்.டி.எஃப்.சி. வங்கி, இன்ஃபோசிஸ் பங்குகள் தலா 1% . ஐசிஐசிஐ வங்கி பங்கு 2.9%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 2.7%, ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு 1.9% விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 215 புள்ளிகள் அதிகரித்து 21,454 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 690 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!