தொடர்ந்து மான்ராஜ், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர செயலாளருமான இன்பத்தமிழனிடம் இப்பிரச்சனை தொடர்பாக பேசி இருக்கிறார். ஏற்கனவே சார் பதிவாளர் முத்துசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறைகளிடம் இன்பத்தமிழன் புகார் அளித்து இருப்பதாகவும் அந்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மான்ராஜிடம் தெரிவித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போலீசார் அரசு அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post சார் பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.