அமைச்சர் உதயநிதி டிவிட் நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

சென்னை: நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு (நேற்றுடன்) வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம். நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் உதயநிதி டிவிட் நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: