அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: