அதன் தொடர்ச்சியாக நடைபாதைகள் மேம்படுத்தும் பணி, சாலையை புதுப்பிக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட உள்ளது. ஒரு நாளைக்கு 8 கிலோ மீட்டர் நடந்தால் தினமும் 10,000 அடி எடுத்து வைக்க படும். இதனால் அடிப்படை உடல்நலம் உறுதி செய்யப்படும். அதிகாலை 5 மணி துவங்கி காலை 8 மணி வரை இந்த ஹெல்த் வாக் சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நடந்து வருவதற்கு ஏற்ற சாலை என்பதை உணர்த்தும் வகையில் சிலைகள் மற்றும் செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்பட உள்ளது. 4ம் தேதி காலையில் இந்த சாலையை துவக்கி வைத்து கடற்கரை சாலை வரை தமிழ்நாடு முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார். கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு இருக்கும் மேடையில் இருந்து மற்ற 37 மாவட்டங்களில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார். இந்நிகழ்வில் திரை துறை நட்சத்திரங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என 5,000 பேர் வரை பங்கேற்று நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு கூறினார்.
The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் ஹெல்த்வாக் திட்டத்தை நவ.4ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.