சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிந்தது. சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.