கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.மேலும், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார். மேலும், அடுத்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொளி மூலம் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.முறையீட்டை கேட்டுக் கொண்ட நீதிபதி அல்லி பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
The post ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு : அவசர வழக்காக விசாரிப்பது குறித்து நீதிபதி பரிசீலனை!! appeared first on Dinakaran.