×

மிக்ஜாம் புயல்…உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டும் பிற மாவட்டங்கள் : சென்னைக்கு குவியும் நிவாரணப் பொருட்கள்!!

சென்னை : மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பொருட்கள் நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இருந்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கிடைத்துள்ளன. அரிசி, கோதுமை, போன்ற தானியங்கள், பிஸ்கட், பால், பால் பவுடர், பாய், போர்வை, பழ வகைகளும் அனுப்பி வைக்கப்பட்டன. மெழுகுவர்த்திகள், ஆடைகள், நாப்கின்கள் உள்ளிட்டவை லாரிகள் மூலம் வந்தடைந்தன. தூத்துக்குடி நகர மக்கள் சார்பில் ரூ. லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சென்னை வந்து சேர்ந்தது.

15,000 லிட்டர் குடிநீர் பாட்டில்கள்,1,380 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு உள்ளிட்டவை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி, எண்ணெய், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் லாரிகளில் வந்து சேர்ந்தது. நாமக்கல்லில் இருந்து சென்னை வந்த நிவாரணப் பொருட்கள் திருவொற்றியூர் முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் உள்ள பச்சமுத்து கல்வி நிறுவனம் ஒன்று 50 டன் அரிசியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5,000 போர்வைகள், 5000 குடிநீர் பாட்டில்கள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னைக்கு வரும் நிவாரணப் பொருட்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகின்றன.

The post மிக்ஜாம் புயல்…உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டும் பிற மாவட்டங்கள் : சென்னைக்கு குவியும் நிவாரணப் பொருட்கள்!! appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,STORM ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்; பலி 226 ஆக உயர்வு