மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதுவரை 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வன்முறைக்காரர்களால் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்ட போதிலும், வன்முறை ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று மணிப்பூர் சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து ராகுல்காந்தி இம்பால் திரும்பினார். இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்லும் வழியில் சகோதரர் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய மணிப்பூர் காவல்துறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். முக்கியமான பிரச்சினையில் பிரதமர் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் மக்களுக்கு காது கொடுக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அங்கு அமைதியை மீட்டெடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான எதேச்சதிகாரர்களின் இத்தகைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் அபத்தமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: