மேலும், பெயர்த்தெடுத்த கான்கிரீட்கள் கழிவுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், அச்சாலை குறுகிய சாலையாக இருப்பதாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமமடைந்துள்ளனர். மேலும், சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காமல் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வீட்டின் கழிவுநீர் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடையில் இணைத்தும், பெயர்த்தெடுத்த சிமென்ட் சாலையை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.