இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழையும் பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்னகல்லாறு 70மிமீ, சோலையார், வால்பாறை, திருநெல்வேலி 50மிமீ, பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலின் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 26ம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.