மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைத்த குழுவினருக்கு அழைப்பு..!!

டெல்லி: மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைத்த குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 29 மற்றும் 30ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகியோருக்கு தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. கூட்டணி நிலவரம், தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்க தமிழக காங்கிரஸ் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைத்த குழுவினருக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: