சென்னை: உள்ளாட்சிகள் தினமான வரும் நவம்பர் 1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திட கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post உள்ளாட்சிகள் தினமான வரும் நவ.1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.