அப்போது குடும்ப விவகாரம் என கூறிய அந்த தம்பதி மீது நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகிய 3 காவலர்கள் கண்மூடி தனமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜா, அவருடைய மனைவி உஷா, மகன் சூரிய ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 காவலர்கள் அன்றைய தினமே வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தனது குடும்பத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தராவிட கோரி ஓட்டுநர் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 3 காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.50,000 வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 2016ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் காவல்துறையினருக்கு சாதகமாக அப்போதைய அதிமுக அரசு நடந்து கொண்டதாகவும் அதனால் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 3 காவலர்கள் மீது 12 வாரங்களுக்குள் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
The post பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்.. 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.