இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் இறங்கி பிரட்ரிக் சாம்சனை காப்பாற்றிய நிலையில் இரண்டரை வயது குழந்தை ரோஜர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடி வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய பிரட்ரிக் சாம்சன் ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கும்பகோணத்தில் மதுபோதையில் நண்பரின் குழந்தையை ஆற்றில் தவறவிட்ட நபர்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.