இரண்டாம் நாளான இன்று(8ம் தேதி) காலை 7 மணிக்கு கிருஷ்ணர் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் கிருஷ்ணர் சுவாமி எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தடைந்தார்.
அப்போது வீடுகள் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் சுவாமிக்கு எண்ணெய் சமர்ப்பித்து தரிசனம் செய்தனர். பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
The post கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீ ரங்கத்தில் இன்றிரவு உறியடி உற்சவம் appeared first on Dinakaran.