The post கேரளாவில் பரவும் நிபா வைரஸ் : தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் : தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை : கேரளாவில் பரவும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில், கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.